28.
|
கொங்கார் நிதியும் புகழ்கிருஷ்ண ராயர் கொலுச்சபையில் சிங்கார மாகிய வேளான் மகளெனச் சென்றுவளர் சங்கரன் கச்சியில் வாழ்திறக் குத்தித் தள்ளிவைத்தே மங்காத கீர்த்தி புகழ்படைத் தான்கொங்கு மண்டலமே |
(பி..ம்) "புகழ்கிட்ண" "சங்காரக் கச்சியில்" "சங்கார் கச்சியில்" "வேளான்" 'வாழ்ந்திட'
(வாரணவாசி குலம்)
29.
|
ஆணெவ ரென்று பனிரெண்டு பட்டமு மாகுந்திக்கில் வேணுமென்றுச்சித ராயர்சிம் மாசன வேளாளர்கோன் காணவு மேவுந் திருமலை நல்லான் கனகரற்னம் வாரண வாசிமெய் மன்றாடி வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'ஆணவரென்று', கனகரத்தினம், 'பட்டமாகுந்திக்கு' வேணுமென்றச்சுயராயர்,' வேணுமென்றுச்சயராயர்'
(திருவமட்டி குலம்) - (திருவம்படி குலம்)
30.
|
வேளுங் கயலும் திருவும் பிறையும் விதவிதமா யாளுங் கமல நதியுங் காவேரியு மன்றுசிவன் யேழுங் குலமும் திருவம் படியிவ னேழலகும் வாழுங் கரசையில் நல்லவன் வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்) 'விதவிதமும்' 'திருவம்படிவமே மேழுலகும்' "கறைசியில்" 'கரசியில்' "வேழம் ஆழம்"
|