வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர்

அவர்களின்

கைப்பிரதியிலிருந்து கிடைத்த பாடல்கள்

(பூச்சந்தை குலம்) *

காச்சிய பாலொடு தேவா வமுதங் கனியுநெய்யும்
பாச்சிய தேனும் பெருக்கா யளித்தனன் பாவலற்கு
பூச்சந்தை கோத்திரன் பூந்துறை நாடன் புகழலகன்
வாச்சு தெனக்கன பொன்மாரி பெய்கொங்கு மண்டலமே

(இதுவுமது)

அணிக்கொடி யாமலர் சிவனிட பூசைக்கு அன்புவைத்தே
யிணக்கிய புற்பங் குறைந்துதென்றேமலர் எண்ணியெண்ணி
துணிக்கரம் வீர மணிக்கட் டறுத்துச் சுகமுகன் முத்து
மணிக்கரஞ் சாத்திய பூச்சந்தை கோன்கொங்கு மண்டலமே

மேல்கண்ட பிரதிகளில் முற்றிலும்

பாடபேதங்களாக உள்ளவை

1 வாலசுந்தரக் கவிஞர் சதகத்தில் "கார்கொடுத்தோ என்னும்"
தொடக்கப்பாடல் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

"தேர்கொடுத் தோனும் பரிகொடித்தோனும் திருமனையில் தார்கொடுத்
தோனும் தலைகொடுத் தோனும் தமிழ்க் கிரங்கி ஊர்கொடுத்தோனும்
உயிர்கொடுத்தோனும் உதையுதைக்க மார்கொடுத் தோனும் இவர்காண்
புகழ்கொங்கு மண்டலமே

2 "அற்றது கூடவும்" எனும் 84 ஆம்பாடல்

(அந்துலகுவம்)

அற்றது பொருதப் பாடி யவ்வைக் கடிமையென்று
பெற்றவன் கீர்த்தி கங்கா குலயோகப் பிரபலனாம்
முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின் பாய்க் கொடுத்து
வைத்தவன் அந்துவ கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே

(மேல்கண்ட பாடல்கள் இரண்டும் கம்பநாத சுவாமியவர்கள்
நூலிலும் இவ்வாறே அமைந்துள்ளன) இரண்டாம் பாடலில், "சுந்தரர்
பாடற் கடிமையென்று" எனவும், மூன்றாம் சதகத்துள் "அவ்வைக்
கடிமையென்று" எனவும் எழுதப்பெற்றுள்ளது.


* அரச்சலூர்க் காணியாளராயிருந்தவர் பூச்சந்தி குலத்தினர்
வேட்டுவர் தொல்லையினால் கேரள தேசம் சென்று சிறப்பாக
வாழ்கின்றனர். (கைப்பிரதியில் உள்ளவாறு)