|
கழுமலத்தில்
யாத்த களிறுங் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால்
(பழமொழி)
சுடப்பட் டுயிருய்ந்த
சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையா ரெய்தா வினை
(பழமொழி)
முச்சக் கரமு
மளப்பதற்கு நீட்டியகால்
இச்சகக் கரமே அளந்தால் - செச்செய்
அரிகான் மேற்றென் றெடுக்கு மாய்புன னீர்நாடன்
கரிகாலன் கானெருப் புற்று,
(பொருநராற்றுப்படை)
விண்ணுளார்
மறைகள் வேதம் விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின் வெல்வார் கரிகாலனை
நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின்ற வலங்காரமே.
(திருஞான
- தே - திருக்கச்சியேகம்பம்)
|