மால்வரைக்
- கமஞ்சூழ் சாரற்க வினியநெல்லி
யமிழ்து விளை தீங்கனி யௌவைக் கீத்த
வுரவுச் சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக் கடற்றாணை யதிகனும்
(சிறுபாணாற்றுப்படை)
பூதலத்தினி
லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற்
காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை
செய்து
வீதலின்மருந்
தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்
தீதிலாக்கனி யொன்றினை யுதவவே* சேரலன் மகிழ்வெய்தி.
இந்த
வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி சயமென்னோ
சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங்களி கூர்ந்தே
அந்த நாட் பிரமன்றரு மலையிதி லதிசய சஞ்சீவி
எந்த நாட்களு முளதிதை யுட்கொள நரைதிரை யிவைமாற்றும்
(கரபுர
நாதர் புராணம்)
|