உடாஅ
போரா ஆகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்!
(பரணர்
- புறம்)
மடத்தகை
மாமயில் பனிக்கு மென்றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
(வன்பரணர்
- புறம்)
வானம்
வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்கன் னாடன் பேகன்
(சிறுபாணாற்றுப்படை)
முல்லைக்குத்
தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாம லீந்த இறைவர்போ னீயுங்
கரவாம லீகை கடன் - (ஐயனாரிதனார்).
|