|
தன் குடியிருக்குஞ் சேரியைக்
கைலாசமென்று வர்ணித்துச் சொன்னபடியால்,
உபமன்யபகவான் மிகவுங்
கொண்டாடிச் சொல்லுகின்றார்.
நொண்டிச்சிந்து.
ராகம்-புன்னாகவராளி; தாளம்-மிச்ர
ஏகம்.
ஊ பழனமருங்கணையும்-புலைப்-பாடியதுகூரை
வீடுதனில்
சுரையோபடர்ந்திருக்கும்-அதைச்-சுற்றிலும்நாய்கள்
குலைத்திருக்கும்
பருந்தோடிவட்டமிடும்-இளம்-பச்சைப்பிசிதமே
லிச்சைகொண்டு
கோழிகூவுங்கூக்குரலும்-பாழுங்-கொல்லையருகினில்
வெள்ளெலும்பும்
நரம்புங்குவிந்திருக்கும்-பல-நெட்டிமிதந்திடும்
குட்டைகளில்
நண்டோகுடியிருக்கும்-சிறு-நத்தைகமடம் வலுத்திருக்கும்
தோலூறுங்கேணிகளில்-வெகு-தொல்லைப்படும்வாடை
சொல்லறியாப்
பரம்போஅடித்திருக்கும்-வயற்-பக்கங்களில்மெத்த
நொக்கெலும்பும்
கிழித்தோல்நரம்புகளும்-அவர்க்-கீனமில்லை
சிறுமீனுலரும்
தெருவில்விளையாடிக்கொண்டு-அவர்-தெந்தினம்பாடுவர்
சுந்தரமாய்
இலுப்பைமணியரையில்-கட்டி-இண்டந்தலைகளில்
பூண்டிருக்கும்
சங்குதோடுகாதணியும்-அருந்-தாவடமேயவர் தூவிடமாம்
மணியோதரித்திருப்பார்-தெரு-வாசற்புறந்தனி
லேசிக்கொண்டு
கொண்டாட்டமாயிருப்பார்-கையைக்-கொட்டிக்கொண்டுதனக்
கிஷ்டமுடன்
மதுவுண்டுகெக்கலிப்பார்-பற-வாத்தியமும்வெகு
நேர்த்தியுடன்
இருக்கும்புலைப்பாடி-அதில்-ஈசன்திருவடி நேசமுடன்
தரிக்கும்ஒருபுலையர்-அவர்-ஜாதிமுறை தவறாதவராம்
நந்தனா ரவர்பெயராம்.
வசனம்.
இவ்விதமாய்க்
கடையரிருப்பின் வரப்பினில் வாழ்வார் இப்பரிவுடன்
சிவன்கழற்கேவிளைத்த வுணர்வோடு மந்தராகத்தில்
ஊ இந்நொண்டிச் சிந்து
முழுவதும் 7-ஆம் பக்கத்தில் பதிக்கப் பட்டிருக்கிறது,
அதுவே
பகுதி பகுதியாகப் பின்னர் கூறப்படுகிறது.
|