|
நந்தனார் - பூசத்திருநாளில்
போய்வருவோமென்றார்
புலையர் - பேசத்தெரியாது பேயாநீபோவென்றார்
நந்தனார் - அழுதுமுறையிட்டாலம்பலத்தேகேட்குமென்றார்
புலையர் - உழுதுபயிரிட்டா லுள்ளபடிவிளையுமென்றார்
நந்தனார் - சித்தமெல்லாமம்பலத்தே
சென்றுதேடுதென்றார்
புலையர் - பக்தியெல்லாம்வேறுபட்டுபறந்துபோச்சுதென்றார்
நந்தனார் - குற்றாலத்தீசனைக்
கூறுவீரென்றார்
புலையர் - கைத்தாளம்போட்டுக் கதறுவீரென்றார்
நந்தனார் - தாண்டவராயனே தகுந்தெய்வமென்றார்
புலையர் - தூண்டிவீரப்பனே தொழுந்தெய்வமென்றார்
நந்தனார் - இஷ்டப்படிநடக்கு
மீசனைத் துதியென்றார்
புலையர் - கஷ்டப்படமாட்டோம் கசக்காதேபோவென்றார்
நந்தனார் - கொண்டாடிதெய்வத்தைக்
கொள்ளுவீரென்றார்
புலையர் - பொண்டாட்டித்தெய்வமே பெருந்தெய்வமென்றார்
நந்தனார் - நலத்தைக்கொடுக்கவந்த
நற்குருவென்றார்
புலையர் - குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்பென்றார்
நந்தனார் - பலவழக்கம்நானறிவேன்
பறையரேயென்றார்
புலையர் - குலவழக்கமறியாத குருடாபோவென்றார்
நந்தனார் - நாக்கறுப்பேன்சிவனை
நவிலுவீரென்றார்
புலையர் - மூக்கறுப்பான்கதையை மொழிந்தீரேயென்றார்.
__________
வசனம்.
நந்தனார் பெரியோருடை அனுஷ்டானத்தைப்
புலையர்களுக்குச் சொல்லுகிறார்:
|