(வி-ரை.)
விமலனுக்கு வழிபாடில்லாமற்
பிற தெய்வங்களை
வணங்குதல் தகாது. கண்டாய் : முன்னிலை அசைச்சொல்.
81.
மறையோர் சிறப்பு
ஓராறு
தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
ஒன்றுதப் பாது புரிவார்;
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
அதிதிபூ சைகள்பண் ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
பிழையா திருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்
பேசுதற் கரித ரிதுகாண்!
ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஆர்
ஆர் நெடுஞ் சடில அமலனே - ஆத்திமாலை தரித்த
நீண்ட சடையை உடைய தூயவனே!, எனை ஆளும் அண்ணலே - என்னைக்
காக்கும் பெரியோனே!, அருமை ...... தேவனே!, வைதிக நல்மார்க்கமே
பிழையாது இருக்கும் மறையோர் - மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது
செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் - (தமக்கு உரிய)
ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் -
தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், உதய ஆதியில் சென்று
நீர் படிகுவார் - வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும்
மறவாது |