பக்கம் எண் :

124

     (வி-ரை.) விமலனுக்கு வழிபாடில்லாமற் பிற தெய்வங்களை
வணங்குதல் தகாது. கண்டாய் : முன்னிலை அசைச்சொல்.

        81. மறையோர் சிறப்பு

ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
     ஒன்றுதப் பாது புரிவார்;
  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
     ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
     அதிதிபூ சைகள்பண் ணுவார்;
  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
     இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
     பிழையா திருக்கும் மறையோர்
  பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்
     பேசுதற் கரித ரிதுகாண்!
ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே - ஆத்திமாலை தரித்த
நீண்ட சடையை உடைய தூயவனே!, எனை ஆளும் அண்ணலே - என்னைக்
காக்கும் பெரியோனே!, அருமை ...... தேவனே!, வைதிக நல்மார்க்கமே
பிழையாது இருக்கும் மறையோர் - மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது
செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் - (தமக்கு உரிய)
ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் -
தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், உதய ஆதியில் சென்று
நீர் படிகுவார் - வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும்
மறவாது