22.
இருநிலையினும் பயனற்றவை
குணம்அற்ற
பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?
குட்டநோய் கொண்டு மென்ன?
குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாது
கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?
மலராது போகில் என்ன?
மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?
மாவெண்மை யாகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படரா
துலர்ந்துதான் போகி லென்ன?
உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?
ஓங்கும்மிடி வரில்என் னகாண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அணியுற்ற
பைங்கொன்றை மாலிகா ஆபரணனே -
அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,
ஆதியே - முதல்வனே!, அருமை........தேவனே!, குணம் அற்ற பேய்
முருங்கைத் தழை தழைத்து என்ன - நல்ல குணம் இல்லாத பேய்
முருங்கை தழைத்தால் என்ன பயன்?, குட்டநோய் கொண்டும் என்ன -
குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கின்ற நாய் மடி
சுரந்து என்ன - குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன
பயன்?, சுரவாது கொஞ்சமாய்ப் போகில் என்ன - பெருகாமற் கொஞ்சமாக
இருந்தால்தான் என்ன பயன்?, மணம் அற்ற செம் முருக்கது பூத்து
அலர்ந்து என்ன - மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து
என்ன பயன்?, மலராது போகில்
|
|
|
|