பக்கம் எண் :

68

விழைதரு பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும்
     வீரவித ரணிக ருக்கும்
  மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன
     விரகுளோர் உரைசெய் குவார்!
அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழல் விழிகொடு எரிசெய்து மதனவேள் தனைவென்ற
அண்ணலே - தீவிழியினாலே காமனை எரித்து வென்ற பெரியோனே!,
அருமை ....... தேவனே!, செழுமணிக்கு அதன்மட்டிலே ஒளி - நல்ல
மாணிக்கத்துக்கு அதன் அளவிலேதான் ஒளியுண்டு, அதினும் செய்ய
கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி - அம்மணியைக்
காட்டினும் சிவந்த மின்மினியெனக் கூறப்படும் புழுவுக்கு மிகுதியான ஒளி
உண்டு, அதனினும் தீபத்தின் ஒளி அதிகம்ஆம் - அந்த மின்மினியினும்
விளக்கின் ஒளி மிகுதியாகும், தீபத்தின் பழுதுஇலாத் தீவர்த்தி அதிகம்
ஆம் - விளக்கினும் குற்றமற்ற தீவர்த்தியின் (ஒளி) மிகுதியாகும், அதில்
பகல்வர்த்தி அதிகம் ஆம் - அதனினும் பகல்வர்த்தி(யின் ஒளி)
மிகுதியாகும், அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் - பகல்வர்த்தியினும்
பெரிய மத்தாப்பின் ஒளி மிகுதியாகும், அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம்
ஆம் - மத்தாப்பினும் குளிர்ந்த திங்களின் ஒளி மிகுதியாகும், விழைவுதரு
பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும் வீரவிதரணிகருக்கும் - விருப்பம் ஊட்டும்
ஞாயிற்றினுக்கும் செங்கோல் அரசர்க்கும் வீரமுடைய அறிஞருக்கும்,
மிக்கஒளி திசைதொறும் போய்விளங்கிடும் என்ன விரகு உளோர்
உரைசெய்குவார் - பேரொளி எட்டுத்திக்கினும் சென்று விசும் என்று
அறிவுடையோர் கூறுவர்.

     (வி-ரை.) ‘கொண்டு' என்பது ‘கொடு' என வந்தது, முருக
வேளினின்றும் வேறுபடுத்தியறிய மதனவேள் என்றார். மதன