தேட்டறிவி
லாதபெரு வீணரே அவரினும்
சேரொரு வரத்தும் இன்றிச்
செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
திரியும்எளி யேனை ஆட்கொண்
டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) வீணனாய்த்
திரியும் எளியேனை ஆட்கொண்டு -
வீணனாகத்திரியும் எளியனான என்னை அடிமையாக ஏற்று, ஆட்டம்
செய்யும் பதஅம்புயம் முடியின்மேல் வைத்த அமலனே - நடனம்இடும்
திருவடித்தாமரையை என் தலை மீது வைத்த தூயவனே! அருமை .......
தேவனே!, வேட்ட அகம் சேர்வோரும் வீணரே - மாமனார் வீட்டில்
உறைவோரும் வீணராவர், அவரின் வீண்உரை விரும்புவோர் வீணர் -
அவரினும் வீண்மொழியாடலை விரும்புவோர் வீணர், அவரின் விருந்து
கண்டு இல்லாள் தனக்கு அஞ்சி ஓடிமறை விரகு இலோர் வீணர் -
அவரினும் விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும்
அறிவு இல்லாதவர் வீணர், நாட்டம்தரும் கல்வி இல்லோரும் வீணரே -
(அவரினும்) (அகக்) கண்ணைத்தரும் படிப்பில்லாதவரும் வீணரே
நானிலந்தனில் அவர்மேல் நாடிக் கவி சொல்வார் வீணர்-(அவரினும்)
உலகில் கல்லாதவரைத் தேடி அவர்மேற் பாக்களைப் புனைவார் வீணர்,
அவரினும் நரரைச் சுமக்கும் எளியோர் வீணரே - அவரினும் மக்களைச்
சுமக்கும் எளியவர் வீணர், தேட்ட அறிவு இலாத பெரு வீணரே அவரினும்
- (பொருளைத்) தேடும் அறிவுஅற்ற பெருவீணரேயான அவரினும், சேர் ஒரு
வரத்தும் இன்றிச் செலவுசெய்வோர் அதிக வீணராம் - வரக்கூடிய எந்த
வரவும் இல்லாமல் செலவுசெய்பவர் பெரிய வீணராவர்.
(வி-ரை.) வேட்டல்
- மணம்புரிதல், விரகு - அறிவு. நாட்டம் - கண்;
இங்கு அறிவைக் குறிப்பதால் அகக்கண் ஆயிற்று; |
|
|
|