பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 27

உரப்பார்க்கு நலம்புரியுந் தண்டலையா ரேசொன்னேன்
     ஒருமை யாக
இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமுண்டோ ஒருகாலும்
     இல்லை தானே.                            54

கொடுங்கோன்மை

படுங்கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
     பங்கஞ் செய்வார்
நெடுங்கோளுத் தண்டமுமாய் வீணார வீணனைப்போல்
     நீதி செய்வார்
கெடுங்கோப மல்லாமல் விளைவுண்டோ மழையுண்டோ
     கேள்வி யுண்டோ
கொடுங்கோல்மன் னவன்நாட்டிற் கடும்புலிவா ழுங்காடு
     குணம்என் பாரே.                           55

தீமைக்குத் தீமை நன்மைக்கு நன்மை

உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று வாழ்ந்தோரும்
     உரைபெற் றோருந்
தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப் பழித்தோரும்
     சாய்ந்தே போவார்

 


54. கரப்பார்  -  உள்ளதை  இல்லை  என்று  சொல்லி மறைப்பவர்.
புரப்பார்-காப்பாற்றும்  அரசர்.  உர பார்-வலிமை பொருந்திய பூமி; இது
பூமியில் உள்ளவர்களைக் குறித்தது.
  

55. படும்  கோலம்  -  விளையும்   துன்பம்.  நெடுங்கோள்- நீண்ட
ஆராய்ச்சி  தண்டம்-தண்டனை  செய்தல்.  ‘இவைகளை  உடையவராய்’
என்க. ‘வீணார வீணன்’ என்பது ஒரு வழக்கச் சொல்.  ‘வீணிலும் நிரம்ப
வீண் உடையவன்; மிக்க வீணன்’ என்பது பொருள். ‘அவனைப்  போல்’
என்றது.  ‘முழுமூடன்  போல’   என்றபடி.  நீதி  செய்தல்  -  நியாயம்
வழங்குதல். குணம் - நன்மை.