1பிற
பாடல்கள்
1.
வம்பருக்குத் தலைமை வம்பரெல்லாம்
ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன? அதுமாறி ஓய்ந்த பம்பரமாய் மூலையினிற்
கிடந்திட்டால் என்ன? அதிற் பலன்உண் டாமோ? கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்
வருந்துபல கழுதை தாமும் அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந் தனிற்கிடந்தென்
ஆகுந் தானே? |
(தொ-ரை.)
கம்பு உலவும் தண்டலையார்
வளநாட்டில் - சங்குகள்
உலவும் நீர்வளம் பொருந்திய தண்டலையாரின் நாட்டிலே, வருந்து பல
கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - (திறனற்று) வருந்துகின்ற பல
கழுதைகள் உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என்
ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்),
வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லா
வகையினும் செல்வாக்கு மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால் என்ன - (அவை) ஆதிக்கங் கெட்டு
ஆடி யோய்ந்த பம்பரம்போல மூலையில் முடங்கிக் கிடந்தால் என்ன?,
அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா?
(வி-ரை)
வம்பர் - வீணர்.
‘ஆடியோய்ந்த பம்பரம்' மரபுத்
தொடர்மொழி. __________________________________________________
1 சில படிகளிலே மேலும் காணப்படும்
தண்டலையார் சதகப்
பாடல்கள்.
|