2.
கடுந் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும் தண்டலையா
ரடிபணிந்து தவம் தானம் உபகாரம் தருமம் செய்து கொண்டபொருள் விலைவாசி காணிதே
டிக்கோடி கொடுப்ப தல்லால் வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி அநியாய
வட்டி வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக் கெடுக்குமிது கருமந்
தானே. |
(தொ-ரை.)
தண்டலையார்
அடிபணிந்து தவம் தானம் உபகாரம்
தருமம் செய்து கொண்ட பொருள் - தண்டலையாரின் திருவடியைப் பணிந்து
தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி
காணி கோடி தேடிக்கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும்
கோடியெனத் தேடிக் கொடுக்குமே யல்லாமல், வண்டருமாய் ஒன்று பத்து
விலைகூறி - தீயவராய் ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லி, அநியாய வட்டி
வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை
வாங்கிச் சேர்ப்பவருடைய சிக்கனமான பொருளீட்டம், கண்ணை
அறக்கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் -
இதுதான் உலகில் நடப்பது.
(வி-ரை.)
விலைவாசி
- விலையிலே உயர்வு தாழ்வு. வாசி :
கொடுக்கல் வாங்கல் எனினும் ஆம். கண் : ஆகு பெயராக வாழ்க்கை
நெறியைக் குறிக்கும்.
‘கடுந்தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்' என்பது
பழமொழி.
3. புரட்டுச்
செயல் ‘இதுகருமம்
: இதனாலே இதை முடிப்பாய்!' எனத்தொழிலை யெண்ணிச் செய்தால் அதுகருமம் பாராமல்
திருடியும் அள் ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம் |
|