பதினெட்டு ஆயுதம் சுமந்த
புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி
எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக்
குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன்
அலுவல் ஒன்றையும் உணராமற் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம்
ஆவர்.
(வி-ரை.)
தண்டலைநாதர்
மகிழாப் பொருள்கள் சைவச் சின்னம்
அல்லாதவை.
‘குங்குமஞ் சுமந்த கழுதை' என்பது
பழமொழி.
"புத்தகமே
சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தகம்
எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும்
புலவரும் வேறே! பொருள்தெரிந்து
தேற்றும்
புலவரும் வேறு"
-
நாலடியார்.
7.
பொற்பூவில் வாசனை கற்பூர
வல்லியொரு பாகர்செழுந் தண்டலையார் கடலேழ் சூழ்ந்த நற்பூமி தனிற்பிறந்தோர்
எல்லோரும் மக்களென நாட்ட லாமோ? அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
பண்பிலார் அழகும் காணின் பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம் பூவுமெனப்
புகலல் ஆமே. |
(தொ-ரை.)
கற்பூரவல்லி
ஒருபாகர் செழுந்தண்டலையார் கடல் ஏழ்
சூழ்ந்த நற்பூமிதனில் - கற்பூரவல்லியான உமையம்மையாரை ஒரு பங்கிலே
கொண்ட இறைவராகிய வளமிக்க தண்டலையாரின் எழுகடலாற் சூழப்பெற்ற
நல்ல நிலவுலகில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ -
தோன்றியவர் யாவரும் மக்கட்பண்புடையவர் என உறுதிகூறல் ஒவ்வுமோ?,
அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் - அன்புமிகும் பண்பு
கொண்டோரின் நல்ல தன்மையும், பண்புஇலார் அழகும் -
|