5.
இல்லறமுந் துறவறமும்
புல்லறிவுக் கெட்டாத தண்டலையார்
வளந்தழைத்த பொன்னி நாட்டில்,
சொல்லறமா தவம்புரியும் சௌபரியும்
துறவறத்தைத் துறந்து மீண்டான்!
நல்லறமாம் வள்ளுவர்போற் குடிவாழ்க்கை
மனைவியுடன் நடத்தி நின்றான்!
இல்லறமே பெரிதாகும்! துறவறமும்
பழிப்பின்றேல் எழில தாமே! |
(தொ-ரை.)
புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார்
வளம்
தழைத்த பொன்னி நாட்டில் - சிற்றறிவுக்குக் கிட்டாத தண்டலையாரின்
வளம்மிகுந்த காவிரி (பாயும் சோழ) நாட்டில், சொல்அற
மாதவம்
புரியும் சௌபரியும் - பேச்சின்றிப் பெருந்தவஞ்
செய்த சௌபரி
என்பவனும்,துறவறத்தைத் துறந்து மீண்டான் - துறவறத்தை விட்டுத்
திரும்பினான், வள்ளுவர் போல மனைவியுடன் நல்லறம் ஆம்
குடிவாழ்க்கை நடத்தி நின்றான் - திருவள்ளுவரைப்போல இல்லாளுடன்
நல்ல அறமாகிய குடிவாழ்க்கையை இனிதே கழித்தான். (ஆகையால்),
இல் அறமே பெரிது ஆகும் - மனையறமே சிறந்தது ஆகும், துறவு
அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் -துறவறமும் (பிறராற்) பழிக்கப்
படாமல் இருந்தால் அழகியதாகும்.
(வி-ரை.)
எழிலது : அது : பகுதிப்
பொருள் விகுதி. ஏ :
ஈற்றசையிடைச் சொல்.
‘அறன்
எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்ப(து)
இல்லாயின் நன்று'
என்னும் திருக்குறளின்
பொருள் இங்கு வந்துள்ளது. ‘இல்லறம் அல்லது
நல்லறம் அன்று' என்பதும் நினக்கத் தக்கது.
சௌபரி
: ஒரு முனிவர்; வேதமித்திரரின்
மாணாக்கர்.
இவர் ஒருமுறை யமுனையாற்றில், தம் குஞ்சுகளினோடு உலவிய
மீன்களைக் கண்டு இல்லறத்தில் விருப்புற்றுத் துறவறத்திலிருந்து
திரும்பி இல்லறத்தை அடைந்தார்.
|