8.
நல்லது நாயகனுக்கு
அல்லமரும் குழலாளை வரகுணபாண்
டியராசர் அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊன்அமுதைக்
கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா
வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்
கென்றதனை நல்கு வாரே. |
(தொ-ரை.) அல்அமரும்
குழலாளை வரகுண பாண்டிய ராசர்
அன்பால் ஈந்தார் - இருள்போலும் கரிய நிறம் பொருந்திய கூந்தலை
யுடையவளை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் அளித்தார், கல்லைதனில்
மென்று உமிழ்ந்த ஊன் அமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார் -
தேக்கிலைக்கலத்திலே மென்று உமிழ்ந்த இறைச்சியாகிய உணவைக்
கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி யிறைவருக்குக் கொடுத்தார்,
சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் -
புகழ்பெறுகிற தண்டலையாருக்குச் செங்கீரையும் மாவடுவும் ஓரடியார்
படைத்தார், பெரியோர் நல்லது கண்டால் அதனை நாயகனுக்கு என்று
நல்குவார் - சான்றோர்கள் நல்ல பொருளைப் பார்த்தால் அது நம்
இறைவனுக் காகட்டும் எனக் கொடுப்பார்கள்.
(வி-ரை.)
வரகுணபாண்டியர்
தாம் மணந்த மனைவி அழகா
யிருந்ததனாற்
சிவபிரானுக்கென்று படைத்தார்; அந்த அம்மையார்
சிவலிங்கத்தில் மறைந்தார். ஆனால்; இவர் பற்றிய கைமட்டும்
மறையாதிருந்தது வரகுணர் வருந்திச் சிவபிரானை வேண்ட அக்கையும்
மறைந்தது.
வேடரான திண்ணனாா்
காளத்தியப்பரைக்
கண்டவுடன் தம்மை
மறந்து தாயினும் அன்புடையராய்க், கான விலங்குகளின் ஊனை நெருப்பில்
வதக்கி வாயிலிட்டுச் சுவை பார்த்துக் கல்லையில் வைத்துக் கொண்டுவந்து
ஊட்டினார்.
|