பக்கம் எண் :

26

      (தொ-ரை.) தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில்
- தூய திருநீற்றை எடுத்து அணிகின்ற தண்டலை யிறைவரின் வளமுடைய
நாட்டில், ஆண்மை  உள்ளோர் - வீரம்  உடையோர், விள்ளுற்ற  கல்வி
உள்ளோர் - விளக்கிக் கூறப்படும் கல்வி கற்றோர், செல்வம் உள்ளோர் -
செல்வம் உடையோர், அழகு உடையோர் - வனப்புள்ளவர் (ஆகியவரின்),
மேன்மை நோக்கி - உயர்வைப் பார்த்து, நமக்கு இல்லை என உள்ளத்தில்
அழன்று இங்கு உழல்வார் எல்லாம் - நமக்குக் கிடைக்க வில்லையே என்று
மனத்தில் வெதும்பி வெதும்பித்  திரிபவர்கள்  எல்லோரும், பிள்ளை
பெற்றவர்தமைப் பார்த்து - பிள்ளை பெற்றவர்களை நோக்கி, இருந்து
பெருமூச்சு எறியும் பெற்றியார் - அமர்ந்து பெருமூச்சு விடும்
தன்மையுள்ளவர்.

      (வி-ரை.) ஏ : ஈற்றசை. அழன்றழன்று : அடுக்குத் தொடர்.
தெண்ணீறு அணிவதை உளநாட்டிற்குக் கூட்டுவது சிறப்பு. பொறுமை : பிறர்
செயும் இடையூற்றைத் தாங்கி மன்னிப்பது. பொறாமை : பிறர் ஆக்கம் கண்டு
மனம் வெதும்புதல். பொறுமைக்குப் பொறாமை எதிர்மறை அன்று.

 

     19. எண்ணமெல்லாம் பொய்யாகும்

மண்ணுலகா ளவும்நினைப்பார், பிறர்பொருள்மேல்
     ஆசைவைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம்என் பதைச்செய்யார், கடைமுறையில்
     அலக்கழிந்து புரண்டே போவார்;
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார்
     வகுத்தவிதிப் படியல் லாமல்
எண்ணமெல்லாம் பொய்யாகும்! மௌனமே
     மெய்யாகும் இயற்கை தானே!

      (தொ-ரை.)  பண்  உலவும் மொழி பாகர்  தண்டலையார்  வகுத்த
விதிப்படி  அல்லாமல் - பண்ணென  இனிக்கும்  மொழியை  உடைய
உமையம்மையாரை இடப் பங்கிற்