பழமொழி
விளக்கம்
என்னும்
தண்டலையார்
சதகம்
மூலமும் உரையும்
காப்பு
- 1
விநாயகர்
சீர்கொண்ட
கற்பகத்தின் வாதாவி நாயகனைத்
தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபாகன் தண்டலையெம்
பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ மொழிவிளக்கம்
இயம்பத் தானே. |
(தொடர் - உரை.)
பேர்கொண்ட ஞானநாயகி
பாகன் தண்டலை
எம்பெருமான் மீதில் - புகழ்பெற்ற ஞான நாயகி அம்மையை இடப்பக்கத்திற்
கொண்டவராகிய தண்டலை நீள்நெறி என்னும் திருப்பதியில் எழுந்தருளிய
எம் இறைவரான சிவபெருமான்மேல், ஏர்கொண்ட நவகண்டம் இசைந்த
பழமொழி விளக்கம் இயம்ப - அழகிய ஒன்பது கண்டங்களிலும் வழங்கிய
பழமொழிகளுக்கு விளக்கம் கூற, சீர்கொண்ட கற்பகத்தின் -
சிறப்பினையுடைய கற்பகத்தினைப்
|