பக்கம் எண் :

42

மறைபயில்பத் திரகிரியும் பட்டினத்துப்
     பிள்ளையும்சேர் மகிமை யாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
     வேந்தன் ஒரு துரும்பு தானே.

      (தொ-ரை.) சிறுபிறை  துன்னிய  சடையார்  தண்டலை  சூழ்
பொன்னி  வளம் செழித்த நாட்டில் - சிறு  பிறை  மதி பொருந்திய
சடையுடைய இறைவரின்  தண்டலையைச்  சூழ்ந்த  காவிரி  வளம்
கொழிக்கும் நாட்டினில், குறை அகலும் பெருவாழ்வும் மனைவியும்
மக்களும் பொருள்ஆ குறித்திடாமல் - குறைவற்ற பெரிய வாழ்வும்
மனைவியும்  மக்களும்  பொருளாக  நினையாமல்,  மறைபயில்
பத்திரகிரியும் பட்டினத்துப் பிள்ளையும்  சேர்  மகிமையாலே -
மறையோதிய பத்திர கிரியாரும் பட்டினத்துப் பிள்ளையாரும் சேர்ந்த
பெருமையினால், துறவறமே  பெரிது  ஆகும் - துறவறமே
சிறப்புடையதாகும்!, துறவிக்கு வேந்தன் ஒரு துரும்புதானே - துறவிக்கு
மன்னன் ஒரு துரும்பைப் போன்றவனே.


      (வி-ரை.)
பொன்னி : பொன் கொழிப்பது : காவிரி ‘துறவிக்கு
வேந்தன் துரும்பு'
என்பது பழமொழி.

 

36. ஆரியக் கூத்தாடுகினும்

பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்மா
     தரும்சூழப் பிரபஞ் சத்தே
பாரியையுற் றிருந்தாலும் திருநீற்றிற்
     கழற்காய்போல் பற்றில் லாமல்,
சீரிசைக்குந் தண்டலையார் அஞ்செழுத்தை
     நினைக்கின்முத்தி சேர லாகும்;
ஆரியக்கூத் தாடுகினும் காரியமேற்
     கண்ணாவ தறிவு தானே.