வழுவாமல் புவி
ஆளும் வண்மை செய்த - நடுநிலை தவறாத ஆட்சியில்
தவறாமல் உலகத்தை ஆளும் கொடையாளியான, தீர்க்கம் உள்ள
அரசனையே தெய்வம் என்பார் - துணிவுடைய மன்னனையே கடவுள் என்று
கூறுவார்கள், கொடுங்கோன்மை செலுத்தி நின்ற - தவறான ஆட்சி
நடத்துகின்ற,
மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் - கொடிய அரசனும்
அவனுடைய அமைச்சனும், ஆழ்நரகில் மூழ்குவார் - ஆழமான நரகத்திலே
அழுந்துவார்கள்.
(வி-ரை.)
நாற்கவி : ஆசு, மதுரம்,
சித்திரம், வித்தாரம். ‘அரசனையே
தெய்வம்' என்றார் இறை என்ற சொல் அரசனையும், தெய்வத்தையுங் குறிக்கும்
ஆதலால், ஏ : தேற்றம். ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக்
கண்டேனே என்னும்' என்றார் பிறரும். தீர்க்கம் - துணிவு, உறுதி.
39.
காதிற் கடுக்கன் முகத்துக் கழகு!
ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்
கழகாகும்;
உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்
களுக்கழகாய்
இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
மெய்க்கழகாய்
நிறைந்து தோன்றும்;
காதிலணி கடுக்கனிட்டால் முகத்தினுக்கே
அழகாகிக்
காணுந் தானே.
|
(தொ-ரை.)
காதில் அணி
கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே அழகு
ஆகிக் காணும் - காதில் அழகிய கடுக்கனை அணிந்தால் முகத்திற்கு அழகிய
காட்சி தரும், (அவ்வாறே) ஓத அரிய வித்தை வந்தால் உரிய
சபைக்கு அழகு
ஆகும் - புகழவியலாத கல்விப்பேறு கிடைத்தால், (கல்விக்குத்) தக்க
அவையிலிருக்க அழகாய் இருக்கும்; உலகில் யார்க்கும் ஈதலுடன்
அறிவுவந்தால் இனிய
குணங்களுக்கு
|