பக்கம் எண் :

61

     56. கெடுபவர்; கெடாதார்!

உள்ளவரைக் கெடுத்தோரும் உதவியற்று
     வாழ்ந்தோரும் உறைபெற் றோரும்
தள்ளிவழக் குரைத்தோரும் சற்குருவைப்
     பழித்தோரும் சாய்ந்தே போவார்!
பள்ளவயல் தண்டலையார் பத்தரடி
     பணிந்தோரும் பாடி னோரும்
பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட
     நல்லோரும் பெருகு வாரே.

      (தொ-ரை.) பள்ளவயல் தண்டலையார் பத்தர் அடி பணிந்தோரும்
பாடினோரும் - பள்ளமான வயல்களையுடைய தண்டலையாரின் அடியவர்
அடிகளை  வணங்கினவரும்  பாடினவரும்  பிள்ளைகளைப்  பெற்றோரும் -
குழந்தைகளைப் பெற்றவர்களும், பிச்சையிட்ட நல்லோரும் - இரந்தவர்க்குக்
கொடுத்தவர்களும், பெருகுவார் - (வாழ்வில்) மேம்படுவார்கள், உள்ளவரைக்
கெடுத்தோரும் - (செல்வம்) உடையவர்களுக்குத் தீங்கு செய்தவர்களும்,
உதவி  அற்று வாழ்ந்தோரும் - (பிறர்) துணையை  நாடாமல்
வாழ்கின்றவர்களும், உறைபெற்றோரும் - (பொய்வழக்குச்) செல்வம்
பெற்றவரும், வழக்கு  தள்ளி உரைத்தோரும் - வழக்கிலே  நடுநிலை நீங்கிக்
கூறியவர்களும், சற்குருவைப் பழித்தோரும் - நல்லாசிரியரை இகழ்ந்தவர்களும்,
சாய்ந்தே போவார் - கெட்டே போவார்கள்.

 

     57. அற்பருக்கு வாழ்வு வந்தால் ......

விற்பனர்க்கு வாழ்வுவந்தால் மிகவணங்கிக்
 
    கண்ணோட்டம் மிகவும் செய்வார்!
சொற்பருக்கு வாழ்வுவந்தால் கண்தெரியா
     திறுமாந்து துன்பம் செய்வார்!