பக்கம் எண் :

63

      (தொ-ரை.) விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில் ஒருத்தர்
சொல்லை மெய்யாய்  எண்ணி - வெற்றியில்  மேம்பட்ட  தண்டலையாரின்
வளமிகுந்த  நாட்டிலே  ஒருவர்  கூறுவதையே  உண்மையென்று  நம்பி,
வசைபெருகப் பிறர் பொருளை அநியாயம் செய்து வலிய வாங்கி - பழி
வளரும்படி மற்றோர்  செல்வத்தை  ஒழுங்கல்லாதன  செய்து  வற்புறுத்திக்
கவர்ந்து, திசைபெருகும் கீர்த்தியென்றும் தன்மம் என்றும் தானம் என்றும்
செய்வது எல்லாம் - எட்டுத்திக்கினும் வளரும் புகழ்ச் செயலெனவும், அறம்
எனவும், தானம் எனவும் புரிந்து வாழும் இச் செயல்கள் யாவும், பசுவினையே
வதைசெய்து செருப்பினைத் தானம் கொடுக்கும் பண்புதானே - ஆவினைக்
கொன்று (அதன் தோலால் தைக்கப்பட்ட) செருப்பைத் தானங் கொடுத்த
தன்மையே.

      (வி-ரை.) விசயம் என்பது எதுகை நோக்கி விசையம் என ஆயிற்று.
விசயம் : விஜயம் என்ற வடசொல்லின் தற்பவம்.
‘பசுவைக் கொன்று
செருப்பைத் தானங்கொடுத்தல்'
என்பது பழமொழி.

 

     59. சிறியோர் பெரியோராகார்

சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய்
     உலகாளத் திறம்பெற் றாலும்
அறிவுடையார் தங்களைப்போற் சற்குணமும்
     உடையோர்கள் ஆக மாட்டார்;
மறிதருமான் மழுவேந்தும் தண்டலையா
     ரே! சொன்னேன்! வாரி வாரிக்
குறுணிமைதான் இட்டாலும் குறிவடிவம்
     கண்ணாகிக் குணம்கொ டாதே!

      (தொ-ரை.) மறிதரும் மான் மழு ஏந்தும் தண்டலையாரே - மறித்து
நோக்கும் மானையும் மழுவையும் கொண்டவரே? தண்டலையாரே!, வாரிவாரிக்
குறுணி மைதான் இட்