|
டாலும் குறிவடிவம் கண்
ஆகிக் குணம் கொடாதே - குறுணிமையை
வாரிவாரித் தடவினாலும் கண்போன்று எழுதிய ஓவியம்
கண் ஆகி நலம்
தராது, (அதுபோல),சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய உலகு ஆளத்
திறம்பெற்றாலும் - அற்பராகிய முழுமூடர்கள் அரசியலிற் கலந்து நாட்டைக்
காக்கும் வகையடைந்தாலும், அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமும்
உடையோர்கள் ஆகமாட்டார் - அறிவுடையவரைப் போல நற்பண்பும்
உடையவர்களாக மாட்டார்கள்.
(வி-ரை.)
‘பொய்படும்
ஒன்றோ புனைபூணும் கையறியாப், பேதை
வினைமேற் கொளின்' என்றார் வள்ளுவரும்.
|
60.
பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சில்லை
கற்றவர்க்குக் கோபமில்லை! கடந்தவர்க்குச்
சாதியில்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பமில்லை! நல்லவருக்
கொருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக் கடிமையில்லை! தண்டலையார்
மலர்ப்பாதம் கும்பிட் டேத்தப்,
பெற்றவர்க்குப் பிறப்பில்லை! பிச்சைச்சோற்
றினுக்கில்லை பேச்சுத் தானே.
|
(தொ-ரை.)
கற்றவர்க்குக்
கோபம் இல்லை - படித்தவருக்குச் சினம்
இல்லை, கடந்தவர்க்குச் சாதி இல்லை - துறவிகட்குச் சாதி இல்லை, கருணை
கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை - அருள் மிகுந்த நல்ல தவத்தினர்க்குப்
பற்றில்லை, ஒருகாலும் நல்லவர்க்கு நரகம் இல்லை - எப்போதும்
நல்லவர்களுக்கு நரகமில்லை, கொற்றவருக்கு அடிமையில்லை - அரசர்கள்
(பிறர்க்கு) அடிமையாவது இல்லை, தண்டலையார் மலர்ப்பாதம் கும்பிட்டு
ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை - தண்டலையாரின் மலரடியை
வணங்கி
வாழ்த்தும் பேறு பெற்றவர்கட்குப் பிறவித்துன்பம்
|