63.
முழுப் பூசணிக்காய் மறைத்தல்
தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்
பொன்னிவளம் தழைத்த நாட்டில்
வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே
நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்
புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்
லாதொருவர் போதிப் பாரோ!
நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்
மறைத்ததுவும் நிசம தாமே!
|
(தொ-ரை.)
தத்தைமொழி
உமைசேரும் தண்டலையார் பொன்னிவளம்
தழைத்த நாட்டில் - கிளியெனப் பேசும் உமையம்மை (இடப்பாகத்தில்)
அமரும் தண்டலையாரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், வித்தக
மந்திரி இல்லாச் சபைதனிலே மேன்மை இல்லை - அறிவுடைய அமைச்சன்
இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, வேந்தர்க்கு எல்லாம் புத்தி நெறி
நீதி சொல்லும் மந்திரி அல்லாது ஒருவர் போதிப்பாரோ - அரசர்க்கெல்லாம்
அறிவுரையும் அரசியல் நெறியும் அரசு முறைமையைக் கற்பிக்கும்
அமைச்சனை யன்றி ஒருவர் கற்பிப்பாரோ?, நித்தலும் உண் சோற்றில் முழுப்
பூசணிக்காய் மறைத்ததுவும் நிசமதுஆம் - நாள்தோறும் உண்ணும் உணவிலே
முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (அமைச்சனில்லா அரசவையிலே)
உண்மையாக முடியும்.
(வி-ரை.)
‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க
முடியுமோ?' என்பது
பழமொழி.
64.
‘பூசை வேளையிலே கரடி'
நேசமுடன் சபையில்வந்தால் வேளையறிந்
திங்கிதமா நிருபர் முன்னே
பேசுவதே உசிதம்அல்லால் நடுவில்ஒரு
வன்குழறிப் பேசல் எல்லாம்
|
|