|
பணந்தானே
பேசுவிக்கும்! தண்டலைநீள்
நெறியாரே! பார்மீ
திற்றான் பணந்தானே பந்தியிலே! குலந்தானே குப்பையிலே படுக்குந் தானே. |
(தொ-ரை.)
தண்டலைநீள் நெறியாரே - தண்டலைநீள் நெறியாரே!,
பணந்தானே அறிவு ஆகும் - பணமே அறிவாக மாறும், பணந்தானே
வித்தையும் ஆம் - பணமே கல்வியைத் தரும், பரிந்து தேடும் பணந்தானே
குணம் ஆகும் - விரும்பிச் சேர்க்கும் பணமே குணமெனக் காட்சிதரும்,
பணம் இல்லாதவர் பிணம் ஆம் பான்மை சேர்வர் - பணமில்லாதோர்
பிணமென்னுந் தன்மையராவர், பணந்தானே பேசுவிக்கும் - பணமே
(பேசாதவரையும்) பேசுமாறு செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே
குலந்தானே குப்பையிலே படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம்
குப்பையிலும் சேரும்.
(வி-ரை.)
‘பணமில்லாதவன் பிணம்' ‘பணம் பந்தியிலே குலம்
குப்பையிலே' ‘பணம் பத்தும் செய்யும்'
என்பன
பழமொழிகள்.
| 73.
பனங்காட்டுநரி சலசலப்புக்கு .....
புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவரும் காலனையும்
போடா என்றே இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி னாறுவய தென்றும் பெற்றான்
அனங்காட்டும் தண்டலையார் அடியாரெல் லாம்ஒருவர்க் கஞ்சு வாரோ! பனங்காட்டு
நரிதானும் சலசலப்புக் கொருநாளும் பயப்ப டாதே. |
(தொ-ரை.)
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு ஒருநாளும்
பயப்படாது - பனங்காட்டு நரி எப்போதும்
|