|
சின்னவரும் பெரியவர்போ லேநடந்தால் உள்ளதுபோம்! சிறிய
காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையும் கெட்டவகை ஆகும் தானே. |
(தொ-ரை.)
பன்னகவேணிப்
பரமர் தண்டலையார் நாட்டில்உள
பலரும் கேளீர் - அரவணிந்த சடைப் பெருமானார் தண்டலை - யிறைவரின்
நாட்டில் வாழும் யாவரும் கேண்மின்!, தன் அறிவு தன் நினைவு
தன்
மகிமைக்கு ஏற்ற நடை தகுமே அல்லால் - தன் அறிவுக்கும்
தன்
சிந்தனைக்கும் தன் பெருமைக்கும் தக்க ஒழுக்கம் ஏற்குமே
அன்றி,
சின்னவரும் பெரியவர் போலே நடந்தால் உள்ளது போம் - எளியவரும்
ஆற்றலுடையார் போல நடந்தால் உள்ளதும் போய்விடும், (அது மேலும்),
சிறிய காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டவகை ஆகும்
- இழிந்த காகம் உயர்ந்த அன்னத்தைப்போல நடக்கத் தொடங்கித்
தன்
நடையையும் இழந்தவாறு முடியும்.
(வி-ரை.)
‘விரலுக்குத் தக்க வீக்கம்'
எனவும்
‘அன்னநடை
நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டது' எனவும்
பழமொழிகள்
வழங்குகின்றன.
| 79.
மகாதேவர் ஆடுமிடத்திலே பேய்களும் ஆடும்
பேரான கவிராச ருடன்சிறிய கவிகளும்ஒர் ப்ரபந்தம்
செய்வார்! வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார்!
பாராளும் தண்டலைநீள் நெறியாரே! இருவரையும் பகுத்துக் காணில், ஆராயும் மகாதேவர்
ஆடிடத்துப் பேய்களும் நின் றாடுமாறே. |
|