வினவினால்,
கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய
கள்ளருடன் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு
குழைத்திடுங் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும்
கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே
மறைந்து பிறரை ஏமாற்றுங் கள்ளராகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவரும்
ஆவர்.
(வி-ரை.)
ஆசாரக்
கள்ளர் ஒழுக்கம் உடையார்போல நடித்து
மக்களை நம்பச்செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது.
இவர்களால் ஒழுக்கமுடையோரும் மக்களால் நம்பப்படார். ஆகையால்
வெளிப்படையாகத் திருடரெனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும் இவர்
தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் : செல்வம் இருந்தும்
இல்லார்போல நடித்திடுவோர். மற்று, நல்ல தோற்றமுடையராகக் காணப்பட்டு
மக்களை ஏமாற்றுவோர் எனினும் ஆம்.
81.
மனத்திலே பகையாகி ... தனத்திலே
மிகுத்தசெழுந் தண்டலையார் பொன்னிவளம் தழைத்த நாட்டில், இனத்திலே மிகும்பெரியோர்
வாக்குமனம் ஒன்றாகி எல்லாம் செய்வார்; சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ
சொல்வதொன்று! செய்வதொன்று! மனத்திலே பகையாகி உதட்டிலே உறவாகி மடிவர்
தாமே. |
(தொ-ரை.)
தனத்திலே
மிகுந்த செழுந்தண்டலையார் பொன்னி வளம்
தழைத்த நாட்டில் - செல்வத்திலே சிறப்புற்ற வளமிக்க தண்டலையாருடைய
காவிரியின் வளங்கொழிக்கும் நாட்டிலே, இனத்திலே மிகும் பெரியோர்
மனம்
வாக்கு ஒன்று ஆகி எல்லாம் செய்வார் - நட்பிலே சிறந்த பெரியோர்கள்
நினைவும் சொல்லும் ஒன்றுபட்டு யாவற்றையும் இயற்றுவார்கள்; சினத்திலே
மிகும் சிறி
|