யோர்
காரியமோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று - செற்றத்திலே சிறந்த
கீழ்மக்களின் வேலையெனிலோ கூறுவது ஒன்று இயற்றுவது மற்றொன்று,
மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவு ஆகி மடிவர் - உள்ளத்திலே பகை
வைத்துக்கொண்டு பேச்சிலே உறவு காண்பித்துக் காலத்தைக் கழிப்பர்.
(வி-ரை.)
‘உள்ளே பகை, உதட்டில் உறவு,'
என்பது
பழமொழி.
82.
‘ஊரோட உடனோட ' தேரோடும்
மணிவீதித் தண்டலையார் வளங்காணும் தேசம் எல்லாம் போரோடும் விறல்படைத்து
வீராதி வீரரென்னும் புகழே பெற்றார் நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு
நடப்பதுவே நீதி ஆகும்! ஊரோட உடனோட நாடோட நடுவோடல் உணர்வு தானே.
|
(தொ-ரை.)
தேர்
ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும்
தேசம் எல்லாம் - தேர் ஓடுகின்ற அழகிய தெருக்களையுடைய
தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து
வீராதி வீரரெனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றியடைந்து
மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும்,
நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச்
செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும்,
ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும்
செல்லும் நெறியிலே தாமும் நடத்தல் அறிவுடைமையன்றோ?
(வி-ரை.)
‘ஊரோட உடன் ஓடு!; நாடு ஓட நடுவோடு!'
என்பது
பழமொழி.
‘ஊருடன் கூடிவாழ்' என்றார்
ஒளவையார்.
|