பக்கம் எண் :

89

ஆகும் - பார்த்தவர் இகழ்வர்; கனமே இல்லை - மதிப்பே இராது; வருவது
எல்லாம் இக்கட்டாம் - வருவது முற்றும் இடுக்கண் ஆகும்; லாபம் உண்டோ
- ஊதியம்  இல்லை; (ஆகையால்), கவறு  கையில்  எடுக்கலாமோ -
பாய்ச்சிகையைக் கையாலுந் தொடலாமோ?, சொக்கட்டான் சூது பொல்லாச்
சூதுதானே - சொக்கட்டான் எனும் சூதாட்டம் தீய சூதாட்டம் ஆகும்.

      (வி-ரை.) "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மின்விழுங்கி யற்று"
என்று வள்ளுவர் கூறினர். கவறு :
சூதாடு கருவி.

 

     89. புற்றடிமண் முதலியவற்றின் பயன்

தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்
     பிரமகுண்டம் தன்னில் ஏய்மண்
மனமேவும் மணியுடனே மந்திரமும்
     தந்திரமும் மருந்தும் ஆகி,
இனமேவும் தண்டலையார் தொண்டருக்கு
     வந்தபிணி யெல்லாம் தீர்க்கும்!
அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம்
     வேறும்உள அவிழ்தந் தானே.

      (தொ-ரை.) தனம் மேவும் புற்றடிமண் குருந்தடி மண் பிரமகுண்டம்
தன்னில் ஏய் மண் - செல்வம் மிக்க புற்று மண்ணும் குருந்த மரத்தடி
மண்ணும் பிரமகுண்டத்தில் உள்ள மண்ணும், மனம் மேவும் மணியுடனே
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி - உளம் விரும்பும் மணியும் மந்திரமும்
ஆராய்ச்சியும் மருந்தும்  என ஆகி,  இனம்  மேவும்  தண்டலையார்
தொண்டருக்கு வந்த பிணி எல்லாம் தீர்க்கும் - உறவாகிய தண்டலையாரின்
அடியவர்க்கு வந்த நோயை யெல்லாம் போக்கும்; வேறும் உள அவிழ்தம்
அனுபோகம் தொலைந்தவுடன் சித்திஆம் - மற்றும் உள்ள மருந்துகள்
(முன்வினைப்) பயன் கழிந்த பிறகே நலந்தரும்.