பக்கம் எண் :

92

     92. ‘நிறைகுடமோ தளும்பாது'

பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்
     விளக்கேற்றிப் புகுத வேண்டும்!
கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து
     நடந்துதலை கீழாய் வீழ்வார்!
வறுமையினும் மறுமையினும் காணலாம்
     தண்டலையார் வாழும் நாட்டில்
நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே
     கூத்தாடி நிற்ப தாமே!


      (தொ-ரை.) தண்டலையாாவாழும் நாட்டில், பொறுமையுடன்
அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் -
பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச்
சென்று காணவேண்டும்!, கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து நடந்து
தலைகீழாய் வீழ்வர் - செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து
தலைதடுமாறி அழிவார்கள்; வறுமையினும் மறுமையினும் காணலாம் -
வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம்;
(எப்போதும் ஒரு மாதிரியே யிருப்பர்), நிறைகுடமோ தளும்பாது - நீர்
நிறைந்தகுடம் எனிலோ தளும்புவதுஞ் செய்யாது; குறைகுடமே கூத்தாடி
நிற்பது ஆம் - நீர் குறைந்த குடந்தான் கூத்தாடி நிற்கும்.

      (வி-ரை.) கருவம் என்னும் சொல் எதுகை மோனை நயங்களை
நோக்கிக், ‘கெறுவம்' ஆயிற்று.
‘இருந்த இடம் விளக்கேற்றிப் புகுத
வேண்டும்' ‘தலைகீழாய் வீழ்வார்
'
என்பன மரபு மொழிகள். ‘நிறைகுடம்
தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்'
என்பது பழமொழி.

 

     93. ஆலமரம் பழுத்தவுடன் ...

ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
     
எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்
காலம்அறிந் தருமையுடன் பெருமையறிந்
     துதவிசெய்து கனமே செய்வார்;