“ஓர்சுறுப்பு மில்லாத தொண்டைவள நன்னாட்டி லுசித வேளைச் சீர்கறுப்பொன் றில்லாத கத்தூரி மன்னனருள் சேயைப் பார்மே லார்கறுப்ப னென்றுசொல்லி யழைத்தாலும் நாமவனை யன்பி னாலே பேர்கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்ப னெனப் பேசுவோமே.” |
தில்லையில் சிலரை வெறுத்துப் பாடியது : |
“பொல்லாத மூர்க்கருக் கெத்தனை தான்புத்தி போதிக்கினும் நல்லார்க்குண் டான குணம்வரு மோநடு ராத்திரியிற் சல்லாப் புடைவை குளிர்தாங்கு மோநடுச் சந்தைதனிற் செல்லாப் பணஞ்செல்லு மோதில்லை வாழுஞ்சிதம்பரனே” |
இரகுநாத சேதுபதியவர்களைப் பாடியது : |
“மூவேந் தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றொடிரு கோவேந் தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப் பாவேந்தர் காற்றி லிலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்தர் தாருவொத் தாய்ரகு நாத செயதுங்கனே” |
காயற்பட்டினம் சீதக்காதியைப் பாடியது : |
“ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும் கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்போர் ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயன்ன தானத்துக்கு மார்தட்டியதுரை மால்சீதக் காதி வரோதயனே” |