10

“ஓர்சுறுப்பு மில்லாத தொண்டைவள நன்னாட்டி
       லுசித வேளைச்
சீர்கறுப்பொன் றில்லாத கத்தூரி மன்னனருள்
       சேயைப் பார்மே
லார்கறுப்ப னென்றுசொல்லி யழைத்தாலும் நாமவனை
       யன்பி னாலே
பேர்கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்ப
       னெனப் பேசுவோமே.”

  

தில்லையில் சிலரை வெறுத்துப் பாடியது :
  

“பொல்லாத மூர்க்கருக் கெத்தனை தான்புத்தி போதிக்கினும்
நல்லார்க்குண் டான குணம்வரு மோநடு ராத்திரியிற்
சல்லாப் புடைவை குளிர்தாங்கு மோநடுச் சந்தைதனிற்
செல்லாப் பணஞ்செல்லு மோதில்லை வாழுஞ்சிதம்பரனே”

  

இரகுநாத சேதுபதியவர்களைப் பாடியது :
  

“மூவேந் தருமற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றொடிரு
கோவேந் தருமற்று மற்றொரு வேந்தன் கொடையுமற்றுப்
பாவேந்தர் காற்றி லிலவம்பஞ் சாகப் பறக்கையிலே
தேவேந்தர் தாருவொத் தாய்ரகு நாத செயதுங்கனே”

  

காயற்பட்டினம் சீதக்காதியைப் பாடியது :
  

“ஓர்தட்டி லேபொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட் டியபஞ்ச காலத்தி லேதங்கள் காரியப்போர்
ஆர்தட்டி னுந்தட்டு வாராம லேயன்ன தானத்துக்கு
மார்தட்டியதுரை மால்சீதக் காதி வரோதயனே”