பக்கம் எண் :

2பழமொழி விளக்கம் என்னும்

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல் விளம்பியசொல்
       மிகுபு ராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல் இசைந்தபொருள்
       எல்லாம் நாடி     
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ மொழிவிளக்கம்
       அறிந்து பாடச்
சோதிபெறு மதவேழ முகத்தொருவன் அகத்தெனக்குத்
       துணைசெய் வானே.

 

அவையடக்கம்
 

வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள அரும்பொருளை
       வண்மை யாக
உள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள் முன்நானும்
       ஒருவன் போலப்
பள்ளமுது நீருலகிற் பரவுபழ மொழிவிளக்கம்
       பரிந்து கூறல்
வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவதனில் ஊசிவிற்கும்
       வினைய தாமே.

 


2. ஏதுவினில் - காரணமாக.
 

அவையடக்கம்     : இது  முதல் ஒவ்வொரு  பாடலின் இறுதியிலும்
ஒவ்வொரு  பழமொழி வருவது காண்க. சில  பாட்டுக்களில் இடையிலும்
ஒரு  பழமொழி  வருகின்றது.  பள்ள  முதுநீர் - கடலில்  நிறைந்துள்ள
மிக்க     நீராற்     சூழப்பட்ட.     பரிந்து-அவாவுற்று.    வெள்ளை
மதியினன்-அறிவில்லாதவன்.