பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 3

நூல்

திருவிளக்கிடுதல்
 

வரமளிக்குத் தண்டலையார் திருக்கோயி லுட்புகுந்து
      வலமாய் வந்தே
ஒருவிளக்கா கிலும்பசுவின் நெய்யுடன் தாமரை நூலின்
      ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்புமில்லை இறப்புமில்லை கைலாசங்
      காணி யாகும்
திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையுந்
      தீருந் தானே.
 

வான் சிறப்பு
 

கூன்செய்த பிறையணியுந் தண்டலையார் கருணைசெய்து
      கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால் உபகாரம்
      என்னால் உண்டோ
ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் நடந்தேற
      உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யும்அதை
      மறந்தி டாதே.                             2
 


1.     கரு  விளக்கும்- கருவைக் காட்டுகின்ற ; கருவில்சேர்க்கின்ற.
காணி-  உரிமை  இடம்.  அறிந்திடும்- விரும்பும். “விளக்கிட்டார் பேறு
சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்“  என்பது திருமுறை (4.77.3.)
 

2. ‘மறந்திடாது என்செய்யும்’ எனக் கூட்டுக.