இட்டதற்குமேல் இல்லை
அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும் பாதாள மதிற்சென் றாலும்பட்டமென வானூடு பறந்தாலும் என்னஅதிற் பயனுண் டாமோபிட்டுவர மண்சுமந்த தண்டலையாரோ முன்னாள் பெரியோர் கையில்இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ தில்லை தானே. 3
நன்மை தீமை
தன்மமதைச் செயல்வேண்டும் தண்டலைநீ ணெறியாரே தயவு செய்வார்வன்மவினை செயல்வேண்டா பொய்வேண்டா பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டா கன்மநெறி வரல்வேண்டா வேண்டுவது பலர்க்கும்உப கார மாகும்நன்மைசெயதார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று நலிவர் தாமே. 4
இல்லறத்தின் சிறப்பு
புல்லறிவுக் கெட்டாத தண்டலையார் வளந்தழைத்த பொன்னி நாட்டிற்சொல்லறமா தவம்புரியுஞ் சௌபுரியும் துறவறத்தைத் துறந்து மீண்டான்
3. அட்ட திசை- எட்டுத்திக்கு. பட்டம்-காற்றாடி. பிட்டு வர- ‘பிட்டு’ என்னும் சிற்றுண்டி கிடைத்தற் பொருட்டு.
4. வன்மம்-பிடிவாதம்.