நல்லறமாம் வள்ளுவர்போற் குடிவாழ்க்கை மனைவியுடன் நடத்தி நின்றால் இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல் எழில தாமே. 5 கற்புடை மங்கையர் முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடையமங் கையர்மகிமை மொழியப் போமோ ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி; வில்வே டனையெரித்தாள் ஒருத்தி; மூவர் பக்கமுற அமுதளித்தாள் ஒருத்தி;எழு பரிதடுத்தாள் ஒருத்தி; பண்டு கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா என்றொருத்தி கூறி னாளே. 6 |