நன்மக்கட் பேறு நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும் குலமுழுவதும் நன்மை யுண்டாம் அன்றியறி வில்லாத பிள்ளைஒரு நூறுபெற்றும் ஆவ துண்டோ மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன் வருடந் தோறும் பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பயனுண் டாமே. 7 இறை யன்பு அல்லமருங் குழலாளை வரகுணபாண் டியராசர் அன்பால் ஈந்தார் கல்லைதனின் மென்றுமிழ்ந்த ஊனமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார் சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார் நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக் கென்றதனை நல்கு வாரே. 8 |