பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 9

பாட்டுக்கே அருள்புரியுந் தண்டலையார் வீதிதொறும்
     பரப்பி டாமல்
காட்டுக்கே எறித்தநிலாக் கானலுக்கே பெய்தமழை
     கடுக்குங் காணே.                           13

சிறியோர் இயல்பு

சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்குறுதி
     தனைச்சொன் னாலும்
அங்கண்உல கிற்சிறியோர் தாம்அடங்கி நடந்துகதி
     அடைய மாட்டார்
திங்களணி சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
     சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக்
     காயா காதே.                               14

பற்றறாமை

உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும் வெகுளிவிட்டும்
     உலக வாழ்விற்
பிழைவிட்டும் இன்னமின்னம் ஆசைவிடா தலக்கழியப்
     பெற்றேன் அந்தோ
தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீ ணெறியேயென்
     தன்மை யெல்லாம்
மழைவிட்டுந் தூவானம் விட்டதில்லை யாயிருந்த
     வண்மை தானே.                            15

 


13. பட்டி மாடு - கபடம் உள்ள மாடு. கானல் - கடற்கரை. கடுக்கும்-
ஒப்பாகும்.
  

14. அங்கண் - அழகிய இடத்தையுடைய. திங்கள் - சந்திரன்.
 

15. உழையிட்ட- மான்போன்ற. வெகுளி- கோபம்.