பக்கம் எண் :

10பழமொழி விளக்கம் என்னும்

அடங்காப் பிள்ளைகள்

கொச்சையிற்பிள் ளைக்குதவுந் தண்டலையார் வளநாட்டிற்
     கொடியாய் வந்த
வச்சிரப்பிள் ளைக்குமுனம் மாதவனே புத்திசொன்னான்
     வகையுஞ் சொன்னான்
அச்சுதப்பிள் ளைக்கும்அந்த ஆண்டவரே புத்திசொன்னார்
     ஆத லாலே
துற்சனப்பிள் ளைக்கூரார் புத்திசொல்லு வாரென்றே
     சொல்லுவா ரே.                             16

பொறுமை

கறுத்தவிடம் உண்டருளுந் தண்டலையார் வளநாட்டிற்
     கடிய தீயோர்
குறித்துமனை யாள்அரையில் துகிலுரிந்தும் ஐவர்மனங்
     கோபித் தாரோ.

 


16.     கொச்சை   -    சீகாழி.   அதில்   தோன்றிய   பிள்ளை.
திருஞானசம்பந்தர். கொடி - காக்கை. வச்சிரப்  பிள்ளை-வச்சிராயுதத்தை
யுடைய இந்திரன் மகன் ; சயந்தன். ‘சயந்தன்  காக்கை  யுருவங்கொண்டு
சென்று சீதையின் தனத்தைக் குத்த, இராமர்  புல்லையே அம்பாக ஏவிக்
காக்கையின்  கண்ணை அழித்து. பின்பு இருகண்களுக்கும்  ஒருமணியே
இருக்க   வரங்கொடுத்தார்’   என்பது   வரலாறு.  அச்சுதப்பிள்ளை  -
திருமால்   மகன்  ;  மன்மதன்.  அந்த  ஆண்டவர்,   தண்டலையார்,
சிவபெருமான் மன்மதனை எரித்த வரலாறு இதில் குறிக்கப்பட்டது.