பக்கம் எண் :

12பழமொழி விளக்கம் என்னும்

புறங்கூறல்

சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார் 
                                     தண்டலையார்
     தொண்டு பேணி    
இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன் றில்லாத
     ஈன ரெல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல் முறைபேசிச்
     சாடை பேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து
     மொழிவர் தாமே.                           20

அறிவில்லாதவர்

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலுந் தெரியாது
     கொடையில் லாத
மடையருக்கு மதுரகவி யுரைத்தாலும் அவர்கொடுக்க
     மாட்டார் கண்டீர்
படியளக்குந் தண்டலைநீ ணெறியாரே உலகமெலாம்
     பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதினோட்டாங் 
                                  கிச்சில்முளை
     வீசி டாதே.                                21

வினைப் பயன்

செங்காவி மலர்த்தடஞ்சூழ் தண்டலைநீ ணெறியேநின்
     செயல்உண் டாகில்
எங்காகில் என்னஅவர் எண்ணியதெல்லாம் முடியும்
     இல்லை யாகில்
 


20. கிள்ளை - கிளி. சாடை-நடிப்பு.
 

21. ‘மடவர்’ என்பது,  ‘மடையர்’  என  மருவிற்று  படி அளக்கும் -
எல்லா உயிர்கட்கும் உணவளித்துக் காக்கின்ற.