7

இறையன்பு மிகுந்தவராகிய இவர் பல  தலயாத்திரைகளைச் செய்தார்.
ஒரு  சமையம்  தில்லையில்  தங்கியிருந்த  பொழுது  கையிற் பொருள்
இன்றிச்  சிவகாமி  அம்மையைப்  பாட,  பஞ்சாக்கரப்  படியில்  ஐந்து
பொற்காசுகள்   பலரும்   பார்க்கும்படி,   ‘புலவர்க்கு   அம்மை  தன்
பொற்கொடை’     என்ற     வாக்குடன்    வீழ்ந்தன.    அவற்றைத்
தில்லைவாழந்தணர்கள்  பொற்றட்டில்  வைத்துப்  பல  சிறப்புக்களுடன்
புலவருக்கு  அளித்தனர்.  இக்காரணம்  பற்றியே  இவருக்கு, ‘படிக்காசு
புலவர்’ என்பது பெயராயிற்று. இவரது இளமைப் பெயர் தெரிந்திலது.
  

படிக்காசு     புலவர்  தம்  வாழ்நாளின்  பிற்பகுதியில் துறவறத்தை
அடைய  விரும்பித்  தருமபுர  ஆதீனத்தை  அடைந்து  அஞ்ஞான்று!
ஆறாவது    மகாசந்நிதானமாய்    ஞானபீடத்தில்    வீற்றிருந்தருளிய
திருநாவுக்கரசு   தேசிகரிடத்தில்  துறவு  நிலையும்,  ஞானோபதேசமும்
பெற்றார்.  இவ்வாதீன  வெள்ளியம்பலவாண  முனிவருடன் குமரகுருபர
சுவாமிகளிடத்தில்    சாத்திரங்களைப்    பயின்றார்.    இவர்   தமது
ஞானாசாரியரிடத்தில்    பாத   காணிக்கையாக   வைத்து   வணங்கிய
பொருளைக்கொண்டு  வாங்கப்பட்ட  நிலம்  இன்றும்  இவர்  பெயரால்
வழங்கப்பெறுகின்றது.
  

தருமையாதீனத்தில்     துறவுபூண்ட  பின்னர், ‘படிக்காசு தம்பிரான்’
எனப்    பெயர்பெற்று    விளங்கிய   இவர்   தமது   ஞானாசிரியரது
அருளாணையின்    வண்ணம்     வேளூர்க்கட்டளை   விசாரணையை
மேற்கொண்டு   அதனை  நடத்தி  வந்தார்.   அக்காலத்தில்  அத்தலப்
பெருமான்மீது இவர் பாடியதே புள்ளிருக்கு வேளூர்க்கலம்பகம். இந்நூல்
மிக  இனிமை  வாய்ந்தது.  வேளூரில்  இருந்த காலத்தில்