தொடக்கம் |
31 முதல் 40 வரை
|
|
|
31. | உமையும் உமையொரு பாகனும் | | ஏக உருவில்வந்திங்(கு) எமையும் தமக்கன்பு செய்யவைத் தார்இனி எண்ணுதற்குச் சமையங் களுமில்லை ஈன்றெடுப் பாள்ஒரு தாயும்இல்லை அமையும் அமையுறு தோளியர் வேல்வைத்த ஆசையுமே. |
|
|
|
|
|
|
|
32. | ஆசைக்கடலில் அகப்பட்டு | | அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் படஇருந் தெனைநின் பாதம்என்னும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லு வேன்ஈசர் பாகத்து நேரிழையே. |
|
|
|
|
|
|
|
33. | இழைக்கும் வினைவழி யேஅடும் | | காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்(து) அஞ்சல்என் பாய்அத்தர் சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே உழைக்கும் பொழு(து)உன்னை யேஅன்னை யேஎன்பன் ஓடிவந்தே. |
|
|
|
|
|
|
|
34. | வந்தே சரணம் புகும்அடி | | யாருக்கும் வான்உலகம் தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும்பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிரும் திங்களுமே. |
|
|
|
|
|
|
|
35. | திங்கட்பகவின் மணம் நாறும் | | சீறடி சென்னிவைக்க எங்கட்(கு)ஒருதவம் எய்திய வாஎண் ணிறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவமெய்து மோதரங் கக்கடலுள் வெங்கட் பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே. |
|
|
|
|
|
|
|
36. | பொருளே பொருள்முடிக் கும்போக | | மேஅரும் போகம்செய்யும் மருளே மருளில் வருந்தெரு ளேஎன் மனத்துவஞ்சத்(து) இருளேதும் இன்றி ஒளிவெளி யாகி இருக்கும்உன்றன் அருளே(து) அறிகின்றி லேன் அம்புயாதனத்(து) அம்பிகையே. |
|
|
|
|
|
|
|
37. | கைக்கே அணிவது கன்னலும் | | பூவும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்எட்டுத் திக்கே அணியும் திருவுடை யான்இடம் சேர்பவளே. |
|
|
|
|
|
|
|
38. | பவளக் கொடியில் பழுத்த | | செவ்வாயும் பனிமுறுவல் தவளத் திருநகை யும்துணை யாஎங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள் அவளைப் பணிமின்கண்டீர்அம ராவதி ஆளுகைக்கே. |
|
|
|
|
|
|
|
39. | ஆளுகைக்(கு)உன்றன் அடித்தா | | மரைகள்உண்(டு) அந்தகன்பால் மீளுகைக்(கு) உன்றன் விழியின் கடையுண்டு மேல்இவற்றின் மூளுகைக்(கு) என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில் லான்பங்கில் வாள்நுதலே. |
|
|
|
|
|
|
|
40. | வாணுதல் கண்ணியை விண்ணவர் | | யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்(கு) எண்ணிய எம்பெரு மாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்(கு) அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றோ? முன்செய் புண்ணியமே. |
|
|
|
|
|
|