போலும்நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே.
68.
பாரும் புனலும் கனலும்வெங்
காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவமுடையார் படை யாத தனமில்லையே.
69.
தனந்தரும் கல்வி தரும்ஒரு
நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள் அபிராமி கடைக்கண்களே.