தொடக்கம் |
71 முதல் 80 வரை
|
|
|
71. | அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத | | வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேலுனக்(கு) என்குறையே. |
|
|
|
|
|
|
|
72. | என்குறை தீரநின்(று) ஏத்துகின் | | றேன்இனி யான்பிறக்கின் நின்குறையே அன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரஎங் கோன்சடை மேல்வைத்த தாமரையே. |
|
|
|
|
|
|
|
73. | தாமம் கடம்பு படைபஞ்ச | | பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும்பொழு(து) எமக் கென்றுவைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்(கு)ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே. |
|
|
|
|
|
|
|
74. | நயனங்கள் மூன்றுடை நாதனும் | | வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. |
|
|
|
|
|
|
|
75. | தங்குவர் கற்பகத் தருவின் | | நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்கிவர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே. |
|
|
|
|
|
|
|
76. | குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல் | | லாம்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில் பறித்தே குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே. |
|
|
|
|
|
|
|
77. | பயிரவி பஞ்சமி பாசாங் | | குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி யென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. |
|
|
|
|
|
|
|
78. | செப்பும் கனக கலசமும் | | போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத் தேன்என் துணைவிழிக்கே. |
|
|
|
|
|
|
|
79. | விழிக்கே அருளுண்(டு) அபிராம | | வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்(டு) எமக்(கு)அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே. |
|
|
|
|
|
|
|
80. | கூட்டிய வாஎன்னைத் தன்னடி | | யாரில் கொடியவினை ஓட்டிய வாஎன்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே. |
|
|
|
|
|
|