தொடக்கம் |
81 முதல் 90 வரை
|
|
|
81. | அணங்கே அணங்குகள் நின்பரி | | வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி லேன்நெஞ்சில் வஞ்சகரோ(டு) இணங்கேன் என(து) உன(து) என்றிருப்பார்சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன்றி லேன்என் கண்நீவைத்த பேரளியே. |
|
|
|
|
|
|
|
82. | அளியார் கமலத்தில் ஆரணங் | | கேஅகி லாண்டமும்நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்எங்ங னேமறப் பேன்நின் விரகினையே. |
|
|
|
|
|
|
|
83. | விரவும் புதுமலர் இட்டுநின் | | பாத விரைக்கமலம் இரவும்பகலும் இறைஞ்சவல் லார்இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே. |
|
|
|
|
|
|
|
84. | உடையாளை ஒல்கு செம்பட்டு | | உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்குநுண்ணூல் இடையாளை எங்கள்பெம் மானிடை யாளைஇங்(கு) என்னைஇனிப் படையாளை உங்களை யும்படை யாவண்ணம் பார்த்திருமே. |
|
|
|
|
|
|
|
85. | பார்க்கும் திசைதொறும் பாசாங் | | குசமும் பனிச்சிறைவண்(டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் கும்முலை யும்முலை மேல்முத்து மாலையுமே. |
|
|
|
|
|
|
|
86. | மாலயன் தேட மறைதேட | | வானவர் தேடநின்ற காலையும் சூடகக் கையும் கொண்டு கதித்தகப்பு வேலைவெங் காலன்என் மேல்விடும் போது வெளிநில்கண்டாய் பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. |
|
|
|
|
|
|
|
87. | மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத | | நின்திரு மூர்த்திஎன்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்விழி யால்மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம்கொண் டாளும் பராபரையே. |
|
|
|
|
|
|
|
88. | பரமென்று உனையடைந் தேன்தமி | | யேனும்உன் பத்தருக்குள் தரமன்று இவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப் பாகம் சிறந்தவளே. |
|
|
|
|
|
|
|
89. | சிறக்கும் கமலத் திருவேநின் | | சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம்அற்ற உறக்கம் தரவந்(து) உடம்போ(டு) உயிர்உற வற்றறிவு மறக்கும் பொழுதென்முன் னேவரல் வேண்டும் வருந்தியுமே. |
|
|
|
|
|
|
|
90. | வருந்தா வகைஎன் மனத்தா | | மரையினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப் பொருந்தா தொருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா னதைநல்கும் மெல்லியலே. |
|
|
|
|
|
|