|
|
இவ்விரண்டையும் `குற்று` என்னும் பல பொருள் குறித்த வொரு சொல்லால் நீலப்பூவைக் `கொய்து` என்றும், நித்திலத்தை `அவைத்து` என்றும் கூறினாரென்று உணர்க.
|
அவைத்தல் - உரலில் நெல் முதலியன பெய்து குற்றுதல். |
| `துவைக்குந் துணி முன்னீர் கொற்கை மகளிர் அவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்தம் மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின் அணங்கமுத மன்னலார் பாடல்.`
|
என இதனுள், பெண்கள் சிறுசோறடுதற்கு நித்திலங் குற்றுதற்கு அவைத்தல் என்று பொருள் வந்தவாறு கண்டுகொள்க. தலைவன் : முன்னிலையெச்சம். |
(84) |
| இறையோன் இறைவி தன்மை யியம்பல்: தாளிணை மாந்தளி ரல்குல்பொற் றேரிடை சங்கைகொங்கை கோளிணை கோலக் குரும்பைகை காந்தள் கொடிக்கரும்பார் தோளிணை வேய்முகந் திங்கள்செவ் வாயிதழ் தொண்டையுண்கண் வாளிணை வார்குழ லாய்வாணன் மாறையெம் மன்னுயிர்க்கே.
|
(இ-ள்.) வார்குழலாய்! வாணனது மாறைநாட்டிலிருக்கும் எம் மன்னுயிர்போல்வாட்கு இலக்கணம், தாளிணை மாவினது தளிர்; அல்குல் பொன்னின் அலங்கரித்த தேர்; இடை உண்டு இல்லையென்னுங் சங்கை; கொங்கை கொத்தில் இரண்டணைந்த அழகார்ந்த குரும்பை; கை காந்தள்; பூங்கொடியும் கரும்பும் குங்கும எழுத்தால் ஆர்ந்த தோளிணை வேய்; முகம் திங்கள்; சிவந்த வாயிதழ் கோவைக்கனி; மையுண்ட கண் வாளிணை; நீ யறிவாயாக என்றவாறு. |
சங்கை - ஐயம். கோள் - கொத்து; 1`கோட்டெங்கின் குலை வாழை` என்புழி, கோள் கொத்தினை யுணர்த்தியவா றுணர்க. அன்றியும், 2`வண்கோட் பலவின்` என்புழியும், கோள் கொத்தினை யுணர்த்தியவாறுணர்க. கோலம் - அழகு. கொடி - வல்லி. `கொடிக் கரும்பு` என்புழி, உம்மைத்தொகை. தொண்டை - கொவ்வைக்கனி. மன்னுயிர்: ஆகுபெயர். |
(85) |
|
1. பட்டினப்பாலை - 16. |
2. மலைபடுகடாம் - 337. |