|
|
பாங்கி குலமுறை கிளைத்தல்: |
போது தலைவியாகவும், தேன் இன்பமாகவும் வண்டு தானாகவும் உவமித்தவதனான் தலைவியின்பத்து மூழ்கும் என்று வருவிக்கப்பட்டது.
|
வனைதல் - செய்தல். புனைதல் - அலங்கரித்தல். அயல் - பக்கம். நண்ணல் - பொருந்தல். அணங்கு - தெய்வப்பெண். `நினையா விடிலுயிர் நில்லாது` என்பது அவாய் நிலையான் வந்தது. `போதகத்தேன் வண்டு` எனவும், `என் நல்வினை தான் வனைந் தாலன கொங்கை மாதுருவாய்` எனவும் மாறுக. |
(87) |
பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்: |
| மருப்பா வியதொங்கல் வாணன்தென் மாறை வனசமலர்த் திருப்பாவை யன்னவென் சேயிழை யாட்குன் திருவுளத்து விருப்பா கியகுறை யுள்ளதெல் லாஞ்சொல்லி வேண்டுகதி பொருப்பா மொழியப் பெறாரெம்ம னோரிவை போல்வனவே.
|
(இ-ள்.) குறிஞ்சிநிலத்து இறைவனே! மணம் பொருந்திய மாலையையுடைய வாணனது தென்மாறை நாட்டுத் தாமரைமலரில் எழுந்தருளியிருக்குந் திருமாது போன்ற எம்பெருமாட்டிக்கு உனது திருவுளத்து விருப்பமாகிய குறையுள்ளதெல்லாம் நீயே சொல்லி வேண்டிக் கொள்வாயாக; அன்றி எம்போல்வார் இவைபோன்ற காரியங்கள் மொழியப்பெறுந் தகுதியர் அல்லர் என்றவாறு. |
மரு - மணம். பாவுதல் - பொருந்துதல். தொங்கல் - மாலை. வனசமலர் - தாமரைமலர். திருப்பாவை - திருமாது. பொருப்பன் - குறிஞ்சிநிலத்து இறைவன். |
(88) |
பாங்கியைத் தலைவன் பழித்தல்: |
| வில்லார் நுதல்வெய்ய வேலார் விரிக்கென் மெலிவுசொல்ல வல்லா ரிலைசொல்ல வல்லையென் றியான்தஞ்சை வாணன்றெவ்வின் ஒல்லா திதுநுமக் கென்றுண ரேனின் றுணங்கியிந்நாள் எல்லா மிரந்தது நின்குறை யேயல்ல என்குறையே.
|
(இ-ள்.) வில்போன்ற நுதலும், வெவ்விய வேல் போன்ற விழியுமுடையாட்கு எனது மெலிவுசொல்ல, நின்னை யல்லால் வல்லாரில்லை; நீ சொல்ல வல்லை யென்றெண்ணி யான் தஞ்சைவாணனுக்குப் பகைவர் செய்தியார்க்கும் பொருந்தாது போல, என் செய்தி நுமக்குப் பொருந்தாதென்ற அறியேன்; வேட்கை வெயிலினால் உலர்ந்து, செஞ்சுடர் தோன்றுங் காலையில் தொடங்கி இன்றாகிய இந்நாள் முற்றும் நும்மை யிரந்தது நின்மேற்குறையல்ல, என்மேற் குறை என்றவாறு. |