|
|
(இ-ள்.) மற்றொழில் பொருந்திய புயத்தையுடைய தஞ்சை வாணன் வெற்பிடத்துள்ளனே! எங்கட்குத் தமராயுள்ளவர் இன்றுவந்து மலையார்ந்தகன்ற புனம் இராக்காவல் விடார்; அவர் நின்னைக் காணில் மிகவும் பொல்லாராயிருப்பர்; நெடுந்தகையை யுடையவனே! இருண்டது போது, எம்மூர்க்கு யாங்களும் போதும், நீயும் இப்போது இங்கு நில்லாது எழுந்தருள்வாயாக என்றவாறு.
|
எமர் - எமக்குத் தமர். பியன் - அகற்சி. நெடுந்தகை : அன்மொழித் தொகை. இதனுள், `வெற்பா` எனவும், `நெடுந்தகை` எனவும் இரண்டிடத்தும் பொருட்பெயர் முன்னிலையாய் நின்றது. இவ்வாறு வந்தது என்னையெனின்,
|
| 1`பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொள்வேறு படாஅ தொன்றா கும்மே`
|
என்னுஞ் சூத்திரவிதியால்.
|
| 2`பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ நற்பூங் கழலா னிருதிங்க னயந்த வாறுங் கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான் வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்டவாறும்.`
|
இதனுள், `நற்பூங்கழலான்` எனவும், `கற்பாடழித்த கனமாமணித் துண்செய்தோளான்` எனவும் இரண்டிடத்தும் படர்க்கைப் பெயர் ஒரு பொருளைக் கருதியவாறு உணர்க. |
| `வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியே நாடறியக் கவ்வை யொருங்கு
|
என்பதனானும் உணர்க.
|
தலைவன் கையுறை புகழ்தல்: |
| சிமையார் மலயத் தமிழ்த்தஞ்சை வாணன் சிறுமலைமேல் அமையா கியதடந் தோளன்ன மேயணி யத்தகுமால் உமையாள் இறைவன் பயில்கயி லாயத்தும் உம்பர்தங்கும் இமையா சலத்துமெல் லாமில்லை யால் நிகர் இத்தழைக்கே.
|
|
1. தொல். சொல். கிளவியாக்கம் - 37. 2. சிந்தா. பதிகம் - 14. |