கட
தஞ்சைவாணன் கோவை
114

 
    (இ-ள்.) சிகரத்தைப்  பொருந்திய  பொதியமலையிற் பிறந்த தமிழ் வளர்க்குந்
தஞ்சைவாணனது    சிறுமலைமேலிருக்கும்  மூங்கிலிற்  பெரிய   தோளையுடைய
அன்னம்போல்வாய், இத் தழைக்கு
நிகர் உமையாள் இறைவனாகிய சிவன் பிரியாது
பழகி  யிருக்குங்  கயிலாயத்தும்,
 தேவர்கள்  பிரியாதிருக்கும் இமையா  சலத்தும்
முற்றுமில்லை யாதலால் அணியத்தகும் என்றவாறு.

    சிமையம் - சிமையென   விகாரப்பட்டு   நின்றது.  மலயம் - பொதிய மலை.
அமை - மூங்கில்.      தடந்தோள் - பெரிய தோள்.     அன்னம்: ஆகுபெயர்.
நிகர் - ஒப்பு. `தடந்தோளாகிய` என மாறுக. ஆல்: அசை. இத்தழைக்கு நிகரில்லை
யென்று  கூறுவது  என்னையெனின்  தன்  உயிரை  நிறுத்தற்கு  ஏதுவாகலானும்,
மணத்திற்குத் தான் முன்னிற்றலானும் என்றுணர்க.
(97)    
பாங்கி கையுறை மறுத்தல்:
  மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலயவெற்பா
நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையி னன்னுதலான்
அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப்
பல்குற் றமும்வரு மால்யாங்கள் வாங்கேம் பசுந்தழையே.

     (இ-ள்.) நிறையுற்ற  தண்புனல்  சூழ்ந்த  தஞ்சைவாணன்  மலய   வெற்பி
லிருப்பவனே!   நீ   தரப்பட்ட   இத்தழை  இந்நாட்டிலுள்ளன  அல்லாமையால்
நன்னுதலாள்  அல்குற்றடத்திலே  யணியில்  எமக்குத்  தமராயுள்ளார்  கண்டால்
ஐயப்படுவர்; அதுவுமன்றிப் பல குற்றமும் வருமாதலால், இப்பசுந்தழையை யாங்கள் வாங்குதல் செய்யேம் என்றவாறு.

மல்குறள் - நிறைதல். நல்குறல் - தருதல். அயிர்த்தல் - ஐயப்படுதல். குலத்துக்கும்
தலைவிக்கும் தனக்கும் மறு என்பது பற்றிப் பல குற்றம் என்று கூறினாள்.
(98)    
ஆற்றா நெஞ்சினோ டவன் புலத்தல்:
ஆற்றா நெஞ்சினொடு அவன் புலத்தல் என்பது,   ஆற்றாமையாகிய நெஞ்சுடனே
தலைவன் புலந்து கூறியது.

  உலழயும்வெங் காளமும் போலுங்கண் ணாளொரு காலமுள்ளம்
குழையுமெம் பாலென்று கொண்டதெஞ் சேகலிக் கோடைமண்மேல்
மழையுமந் தாரமும் வந்தன வாணன்தென் மாறையின்மாத்
தழையுநம் போலிங்ங னேகவின் வாடத் தவஞ்செய்ததே.