|
|
முடியாவிடில், நாளை வெண்பூளைப்பூ எருக்கமுகையுடனே என்புமாலை அணிந்து மடனமா ஏறி வருவேன்; என்னுடைய தொழில் இவை என்றவாறு.
|
`முடியாவிடில்` என்பது அவாய்நிலையான் வந்தது. வன்பணி - அநந்தன். `எருக்க முகிழ்` என மாறுக. அணிவேன் : முற்றுச் சொல் எச்சமாய் நின்றது. பணி - தொழில்.
|
இவ்வாறு மடலேறுவேன் என்று கூறியது பெருந்திணைப் பாற்படுமே யெனின், படாது. என்னை, தலைவன் பாங்கி உடன்படவேண்டுமென்று குறித்துச் சொல்லியதல்லது மடலேறுங் கருத்தாய்க் கூறினன் அல்லன். ஆதலானன்றே படலேற்றென வையாது மடற்கூற்றென்று கூறியது; சான்றோர் செய்யுட்களிலெல்லாம், மடற்கூற்றென்றே வருவதல்லது மடலேற்றென வாராமையானும், 1`மடன்மா கூறுமிடனுமா ருண்டே` என்று தொல்காப்பியர் கூறியவாற்றானும் உணர்க. |
(103) |
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல்: |
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல் என்பது, அவ்வாறு கூறக்கேட்டபாங்கி கிழி தீட்டிய பின்னன்றோ மடலேறுவது, ஆதலால் தலைவி யவயவம் தீட்டுதற்கு அருமையென்று கூறல். |
| தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை சூல்வளையூர் மடையேய் வயற்றஞ்சை வாணன்வெற் பாமல ரோன்வகுத்த படையே நயனம் படைத்தபொற் பாவை படியெடுக்க இடையே தெனத்தெரி யாதுரை யாணி யிடவரிதே.
|
(இ-ள்.) சூல்கொண்ட சங்குகள் ஊரும் மடை பொருந்திய வயல்சூழ்ந்த தஞ்சைவாணன் வெற்பனே! மாலையாக எருக்கையும் என்பையும் நீ யணிந்தால் நினக்கியாது பயனைத் தரும்? கிழி தீட்டிய பின்னன்றோ மடலேறுவது, தீட்டுதல் நின்னால் முடியாது; எங்ஙனமெனின், பிரமன் வகுத்த படைக்கலமே நயனமாகப் படைத்த பொற்பாவையது உருப்படியெடுக்க இடையாதெனின் தெரியாது; சொல்லை யெழுது கருவியால எழுதவரிது.
|
இதனுள், `பொற்பாவை` என்பது, பொன்னம்பாவையாக்கிப் படிக்கல்லிட்டு நிறுக்க நிறையெதேனத் தெரியாது, உரைக்க எண்ணின் உரையாணிடவரிது; இவ்வாறு வேறு பொருடோன்றிச் சிலேடையாய் நின்றது காண்க. |
|
1. தொல். பொருள். களவியல் - 11. |